சண்டிகர்: பஞ்சாபில் அகாலி தள தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மக்கள் நடமாட்டம் மிகுந்த மொகாலியில் நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மொகாலியின் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகாஷ்தீப் சிங் கூறியதாவது: அகாலி தளம் கட்சியின் இளைஞர் அணி தலைவராக செயல்பட்டு வந்தவர் விக்கி மிடுக்கேரா. இவர் நேற்று ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை சந்திப்பதற்காக மொகாலி சென்றுள்ளார்.
அதன்பிறகு பிறகு பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த தனது காரை நோக்கி வரும்போது மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், காருக்குள் ஏறியபிறகு திடீரென ஓடி வரும் 4 பேர் அவரை நோக்கி சுடுகின்றனர். இதனால், அவர் தப்பித்து ஓடுகிறார். ஆனாலும் அவரை துரத்திச் சென்று சராமரியாக சுடுகின்றனர். 9 இடங்களில் அவர் மீது குண்டு பாய்ந்துள்ளது. கொலையாளிகள் கருப்பு உடையுடன் தொப்பியும், முகக்கவசமும் அணிந்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகிறோம் என்றார்.